சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

397 0

stop_abuse01இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய சிறுவர் பாலியல் வன்புணர்வு தொடர்பில் 223 முறைப்பாடுகளும் பாலியல் தொந்தரவு தொடர்பில் 435 முறைப்பாடுகளும், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 99 முறைப்பாடுளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையினை கட்டுப்படுத்த பெற்றோர்கள் தமது பிள்ளைகளை ஏனையவர்களுடன் பழக விடும்போது உள்ள கட்டுப்பாடற்ற தன்மையை குறைக்க வேண்டும் என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி நடாஷா பாலேந்திரா தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பெற்றோர் உண்ணிப்பாக கவனிக்க வேண்டும்.
பெற்றோர் தமது பிள்ளைகளின் பிரச்சினைகளை தெரிந்துகொள்ளும் அளவில் அவர்களுடன் நட்புடன் பழக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.