நந்திக்கடலினை ஆழமாக்குங்கள் – வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் கவலை

334 0

முல்லைத்தீவு நந்திக்கடலில் ஏற்பட்டுள்ள நீர் மட்டக் குறைவு காரணமாக ஆயிரத்து, 800 இற்கு மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்

கடந்த முப்பது ஆண்டுகளாக போர் காலத்தில் அமைக்கப்பட்ட மண் அரண்கள் சுனாமி  மற்றும் நீரோட்டத்தினால் கொண்டு வரப்பட்ட மண் அனைத்தும் நந்திக் கடலை நிரப்பியுள்ளதாக தெரிவித்துள்ள மக்கள்

இந்த நிலையிலேயே கடந்த ஏழு ஆண்டுகளாக நந்திக் கடலினை ஆழமாக்குங்கள் என முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டங்களில் வலியுறுத்தினோம் .

மீன்பிடியில் ஈடுபடுவதில் நெருக்கடி உள்ளது எனவும்நீர் மட்டம் குறைவாக இருப்பதன் காரணமாக கடல் உயிரினங்களின் பெருக்கம் குறைந்துள்ளது எனவே நந்திக்கடலை ஆழப்படுத்துமாறு வலியுறுத்தினோம்

இந்த நிலையில் நந்திக் கடலினை நம்பியுள்ள வற்றாப்பளைநீராவிப்பிட்டிகேப்பாப்புலவுஇரணைப்பாலைபுதுக்குடியிருப்புஅம்பலவன்பொக்கணைமாத்தளன்வலைஞர்டம்முள்ளிவாய்க்கால்செல்வபுரம்வட்டுவாகல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மீனவக்குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

வறட்சி நிவாரணம் நந்திக் கடலினை நம்பியுள்ள குடும்பங்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே முல்லைத்தீவு மாவட்ட கலற்ரொளிலாலர்களின்  கோரிக்கையாகவுள்ளது .

Leave a comment