குற்ற விசாரணைகளைத் தவிர்த்து, அவசியமற்ற முறையில், இராணுவத்தினர் கைதுசெய்யப்படுவது இடம்பெறவில்லை என புதிய பாதுகாப்புச் செயலாளர் கபில வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிகளிடம் ஆசி பெற்றதையடுத்து, ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னரை விட தேசிய பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய பாதுகாப்பை எந்த வகையிலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என பாதுகாப்புச் செயலாளர் கபில வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.