மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தர் தாக்கி கொலை

328 0

மட்டக்களப்பு வாரைப் பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக வாகரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாகரை – புளியம்கந்தலடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 24 வயதுடையவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியவர் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைதுசெய்ய வாகரை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாங்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று காலை அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர், கொழும்பிலிருந்து யாழ்ப்பணம் நோக்கிக் நேற்று முற்பகல் பயணித்த தொடரூந்திலிருந்து தவறி விழுந்ததாக கூறப்படுவபவராக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுகின்றது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மாங்குளம் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment