21 உள்நாட்டு மீனவர்கள் கைது

291 0

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட உள்நாட்டு 21 பேர் இருவேறு பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிலாவெளி, பர்வி தீவுக்கு அருகிலுள்ள பரப்பில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட 15 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவர்கள் பயன்படுத்திய 2 டிங்கி படகுகளும், 220 மீற்றர் நீளமான தடைசெய்யப்பட்ட 2 வலைகளுடன், 319 கிலோ மீன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, திருகோணமலை கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட வலையைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவர்கள் பயன்படுத்திய டிங்கி படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Leave a comment