கடற்படையின் முன்னாள் பேச்சாளர் வெளிநாடு செல்லத் தடை!

259 0

கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கப்டன் டி.கே.பீ. தசநாயக்க வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  வெள்ளவத்தையில் ஐந்து தமிழ் இளைஞர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்ட சம்பவங்களுடன் தசநாயக்கவிற்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பயிற்சி நெறி ஒன்றை கற்பதற்காக வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு தசநாயக்க கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும் குற்ற விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட உள்ள ஒர் சந்தேக நபர் வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியாது என கொழும்பு கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன இன்று தெரிவித்துள்ளார். கப்டன் தசநாயக்க தற்பொது வெலிசர கடற்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment