3 பில்லியன் பெறுமதிவாய்ந்த நெவில் பிரனாண்டோ வைத்தியசாலை 17 முதல் அரசுடைமை

452 2

மாலபே நெவில்பிரணான்டோ வைத்தியசாலையை இம்மாதம் 17 ஆம் திகதி முதல் அரசுடமையாக்கவுள்ளதாக அவ்வைத்தியசாலையின் தலைவர் டாக்டர் நெவில் பிரனாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் அரசியல்வாதிகள் உட்பட அரச அதிகாரிகள் பலர் கலந்துகொள்ளவுள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மூன்று பில்லியன் ரூபா பெறுமதியான இவ்வைத்தியசாலையின் கட்டிடமும், அதில் உள்ள உபகரணங்களும் இவ்வாறு அரசுடமையாக்கப்படவுள்ளது. அத்துடன், இதில் கடமையாற்றிய ஊழியர்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் அரச துறையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் டாக்டர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment