யாழ்ப்பாணத்தில், தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் சமகால அரசியல் களமும், கேள்வி பதில் நிகழ்ச்சியும் இன்று நடைபெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோப்பாய் தொகுதியில் நடைபெற்ற குறித்த நிகழ்ச்சிக்கு, தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவருமாக சீ.வி.கே.சிவஞானம் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வில், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலரும் பங்கேற்றனர்.
இதன்போது நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்களால் சமகால அரசியல் தொடர்பில் கேள்விகளும் எழுப்பப்பட்டிருந்ததுடன், அதற்கு வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் பதிலளித்தார்.