தேர்தலை நடத்தாவிட்டால் மக்களுடன் இணைந்து போராடுவோம் – கம்மன்பில

223 0
உள்ளுராட்சிமன்ற தேர்தலை ஒக்டோபர் மாதம் நடத்தாவிட்டால் மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கி போராடப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மொரட்டுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அரசாங்கம் அராஜகமாக செயற்படுகின்றது.
மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ள முற்படுவதாக தெரிவித்துள்ள உதய கம்மன்பில, அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகள் கண்டனத்திற்குரியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment