யாழ்ப்பாணம் கோண்டாவில் சிவபூமி மனவிருத்தி பாடசாலையின் 14ஆவது ஆண்டு நிறைவு விழா(காணொளி)

1386 0

கோண்டாவில் சிவபூமி பாடசாலையின் தொழிற் பயிற்சி பிரிவிற்கு அமரர் அருளானந்தம் நினைவாக அவரது குடும்பத்தவர்களால் அருளானந்தம் நினைவு மண்டபம் அமைக்கப்பெற்று இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சிவபூமி அறக்கட்டளை தலைவர் ஆறுதிருமுருகன் தலைமையில் நடைபெற்ற கட்டத்திறப்பு விழாவிற்கு லண்டன் தொழில் அதிபர் செல்வி றூபா அருளானந்தம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கட்டத்தை திறந்து வைத்தார்.
சிறப்பு விருந்தினராக யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி வைத்திய கலாநிதி எஸ்.ரவிராஜூம், கௌரவ விருந்தினராக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் ந.சரவணபவனும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகளின் ஆசியுரை, மற்றும் சிவபூமி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் என்பன நடைபெற்றன.

Leave a comment