124 நாளாக போராடும் மக்களை வடமாகாணசபை உறுப்பினர் புவனேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடினார்

251 0

தமக்குரிய பதில் வழங்கப்படும் வரை தமது போராட்டம் நிறுத்தப்படாது  என தெரிவித்துள்ளவலிந்து காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று 124  ஆவது நாளாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக வீதியோரத்தில் கூட்டாரம் அமைத்து போராட்டத்திலீடுபட்டுவருகின்றனர் 

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்தகைதுசெய்யப்பட்ட மற்றும் யுத்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகள் தொடர்பில் உரிய தீர்வை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்

இந்நிலையில் இன்று  வடமாகாணசபை உறுப்பினர் புவனேஸ்வரன் இம்மக்களை  சந்தித்து கலந்துரையாடினார்தொடர்ச்சியாக போராடிவரும் மக்களுடைய நிலைமைகளை கேட்டறிந்ததோடு அவர்களின் போராட்டத்துக்கான ஆதரவையும் வழங்கினார்  

 

Leave a comment