யாழில் தீடீரென தீப்பற்றிய ஆட்டோ

222 0

யாழ். திருநெல்வேலி – ஆடியபாதம் வீதியிலுள்ள ஞான வைரவர் ஆலயத்திற்கருகில் இயங்கி வரும் கராஜ் ஒன்றில் திடீரென முச்சக்கரவண்டியொன்று தீப்பற்றிய நிலையில் முற்றுமுழுதாக எரிந்து நாசமாகியுள்ளது. 

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில், குறித்த கராஜ்ஜின் தொழிலாளர்கள் முச்சக்கர வண்டியொன்றைத் திருத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, முச்சக்கரவண்டித் தாங்கிக்குள் பெற்றோல் நிரம்பிய நிலையில் காணப்பட்டதாகவும், அது கசிந்தமையால், இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சுதாகரித்துக் கொண்ட தொழிலாளர்கள் எரிந்து கொண்டிருந்த முச்சக்கரவண்டியைத் தூக்கி வந்து கராஜ்ஜிற்கு வெளியே வீசியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும், பல இலட்சம் ரூபா பெறுமதியான குறித்த முச்சக்கர வண்டி முற்றுமுழுதாக எரிந்து நாசமாகியுள்ளது.

Leave a comment