கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான பிரார்த்தனை

222 0

பல்கலைக்கழக மாணவர்களது   வருடாந்த பொங்கல் விழாவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான பிரார்த்தனையும் இன்று  பகல்  கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு கிளிநொச்சி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டது  காணாமல்  ஆக்கப்பட்ட உறவுகளை விடுவிக்க கோரி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம்   இன்று  ஞாயிற்றுக்கிழமை 140 நாட்களை  எட்டி உள்ள   நிலையில் கிளிநொச்சி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் குறித்த  பொங்கல் நிகழ்வும் விசேட வழிபாடும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment