கோட்டாவை கைது செய்தால் விளைவு மோசமாகும்- கூட்டு எதிர்க் கட்சி

244 0

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்தால், மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என கூட்டு எதிர்க் கட்சி அறிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த இதனைக் கூறியிருந்தார். ஒரு மாத காலத்துக்குள் கோட்டாபய ராஜபக்ஷவைக் கைது செய்வதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தமை குறித்து கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

பிரதமர் பதவியை எதிர்பார்த்து மஹிந்த அமரவீர இப்படியான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a comment