யாழில் திடீரென தீப்பிடித்து எரிந்த ஆட்டோவால் பரபரப்பு!

231 0

யாழ்ப்பாணம் திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் திருத்தகம் ஒன்றில் நின்றிருந்த முச்சக்கர வண்டியொன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்ததுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று மதியம் 12.30 மணியளவில் நடந்துள்ளது என்று தெரியவருகன்றது.

முச்சக்கர வண்டியைத் திருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது முச்சக்கர வண்டி பெற்றோல் தாங்கிக்குள் இருந்து எரிபொருள் கசித்தாலேயே அது தீப்பிடித்தது என்று கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மாநகர சபைத் தீயணைப்புப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அங்கிருந்தவர்கள் தீப்பற்றிய முச்சக்கர வண்டியை திருத்தத்துக்கு வெளியே வீசியதால் ஏனைய வாகனங்களுக்குச் சேதம் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டது.

Leave a comment