கோட்டாபயவின் கருத்தில் எவ்வித உண்மைகளும் இல்லை – மகிந்த

224 0

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸவை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்திருந்த கருத்தில் எவ்வித உண்மைகளும் இல்லை என சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் , அமைச்சருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர், கண்டி ஶ்ரீ தலதா மாளிகையில் நேற்று வழிபாட்டில் ஈடுபட்டார்.

அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அமைச்சர் மகிந்த அமரவீர தன்னை கைது செய்யவுள்ளதாக  குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் , முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் கருத்து தொடர்பில் எமது செய்திக்குழு அமைச்சர் மகிந்த அமரவீரவை தொடர்பு கொண்டு வினவியது.

எவ்வாறாயினும் , தான் அவ்வாறு எவ்வித கருத்தையும் தெரிவிக்க வில்லை என அமைச்சர் இதன் போது தெரிவித்திருந்தார்.

Leave a comment