கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது

241 0

அதுருகிரிய பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொள்ளையடிப்பதற்கு பயன்படுத்தியுள்ள பாரவூர்தி மற்றும் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் மல்வான மற்றும் பஸ்ஸர பிரதேசங்களினை சேர்ந்தவர்கள் என்பதுடன், இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Leave a comment