வருடாந்த பொங்கல் விழாவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான பிரார்த்தனையும் நாளை கிளிநொச்சியில்.

203 0

நாளை கிளிநொச்சியில் வருடாந்த பொங்கல் விழாவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான பிரார்த்தனையும் நாளை காலை 8 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வு கிளிநொச்சி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படுகிறது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை விடுவிக்க கோரி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம்   நாளை ஞாயிற்றுக்கிழமை 140 நாட்களை    எட்டுகின்ற நிலையில்கிளிநொச்சி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பொங்கல் நிகழ்வும் விசேட வழிபாடும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a comment