மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

236 0

பஸ்ஸர – பெல்கஹதென்ன பிரதேசத்தினை சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

16 வயதுடைய மாணவரே இதன்போது உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் யாரும் இல்லாத அறை ஒன்றில், இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த மாணவர் பாடசாலையில் இருந்து வந்து இரவு நேரம் பாடம் படித்து கொண்டிருந்துள்ளார்.

பின்னர் வீட்டில் சகலரும் நித்திரை செய்த பின்னரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் குறித்து காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Leave a comment