நலத்திட்ட நிதிகளை வழங்குமாறு கோரி கிளிநொச்சியில் காலவரையறையற்ற தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை காலை 07.30 மணி தொடக்கம் கிளிநொச்சி டிப்போச் சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு ஆணையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த ஒரு வருடமாக எந்தவிதமான பதில்களையும் வழங்காத நிலையில் தற்போது 05.07.2017 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு வழங்கப்படாதுவிடில் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டதைத்
தொடர்ந்து வடமாகாண பேரிணையத்தினால் 30.06.2017 ஆம் திகதி இடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் குறித்த பிரச்சினை தொடர்பாக கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரே தீர்வுகாண வேண்டும் என்றும் அவரிடம் இந்தப் பிரச்சினையை பாரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
தொடர்பாக வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் பேரிணையம் தமக்கு எதனையும் தெரியப்படுத்தவில்லை என்றும் பேரிணையத்தில் இருந்து சங்கம் தாமாக விலகுவதாக இருந்தால் பொதுச்சபையின் தீர்மானத்திற்கமைவாக 90 நாட்களின் பின்னர் விலகலாம்
என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல 04.07.2017 ஆம் திகதியிடப்பட்டு வடமாகாண கூட்டுறவு ஆணையாளரினால் எமக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் கூட்டுறவு சட்டங்களுக்கு அமைவாக பேரிணையத்தில் இருந்து ஒரு சங்கம் விலகுவதை அனுமதிக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கிளிநொச்சி மாவட்ட
கூட்டுறவு உதவி ஆணையாளர் விலகலாம் எனவும் வடமாகாண கூட்டுறவு ஆணையாளர் விலகமுடியாது எனவும் குழப்பமான கருத்துகளை கூறியுள்ளனர்.

