குப்பை கொட்டிய சந்தேகத்தின் பேரில் 438 பேர் கைது

276 0

கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டின் சந்தேகத்தின் பேரில் கடந்த 16 ஆம் திகதியிலிருந்து இதுவரையில் 438 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய திண்மக்கழிவு பொருள் முகாமைத்துவ உதவி நிலையத்தில் கடமையாற்றும் படையணிகளின் பிரதானி கேர்ணல் குணசேகர தெரிவித்தார்.

கழிவுப் பொருள் முகாமைத்துவம் தொடர்பில்  மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்குமிடையிலான சந்திப்பு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சில் இன்று நடைபெற்றது. அதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Leave a comment