சில அமைச்சர்களிடம் விரைவில் விசாரணை

425 0

fcidஅரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர் காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜே சீ அலவத்துவல தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அமைச்சர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் இடைநிறுத்தப்படாது தொடரந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
கடந்த காலத்தில் ஊழலில் ஈடுபட்டவர்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் குறித்து முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே சி அலவத்துவல குறிப்பிட்டுள்ளார்.