‘மஹிந்தவுக்கான தமிழர் அமைப்பு’ உருவாக்கும்

211 0

‘மஹிந்தவுக்கான தமிழர் அமைப்பு’ என்ற பெயரில் மஹிந்த ஆதரவு தமிழ் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த அமைப்பு நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும் தமிழர்களுக்கு சொல்லிக்கொள்ளும் படியாக இதுவரையிலும் எதுவும் செய்யப்படவில்லை.

இந்தநிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இவ்வாறு அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியாக அந்த அமைப்பை விரிவுப்படுத்து தொடர்பிலும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்த அமைப்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்;சி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகளின் அங்கத்தவர்கள் அங்கம் வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment