யாழ்ப்பாணம் சாவகச்சேரியில், மரம் அரியப் பயன்படுத்தப்படும்  நவீன இயந்திரம் ஒன்று விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது (காணொளி)

226 0

மரம் அரிவதற்குப் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரம் ஒன்று, நேற்றைய தினம் சாவகச்சேரி கச்சாய்ப் பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டக் காட்டுத் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத நிலையில், பயன்படுத்தப்பட்ட மரம் அரிவதற்குப் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரம் ஒன்றே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மரம் அரிவதற்குப் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரத்தின் பெறுமதி 95 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த இயந்திரம் இலங்கையில பாவனையிலுள்ள இரண்டாவது மரம் அரியும் நவீன இயந்திரம்என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட இருவரும் இன்றையதினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், நாளை சாவகச்சேரி நீதிமன்றில் வழக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment