புதிய அர­சி­ய­ல­மைப்பு அவ­சியம் இல்லை – அஸ்கிரிய மகா­நா­யக பீடம்

338 0

தேர்தல் திருத்தம் தவிர அர­சி­ய­ல­மைப்பில் வேறு எந்­த­வொரு திருத்­தமும் செய்­ய­வேண்­டிய அவ­சியம் இல்லை. புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு பெளத்த பீடம் முழு­மை­யாக எதிர்ப்பை தெரி­விக்­கின்­றது என்று அஸ்­கி­ரிய மகா­நா­யக பீடம்
தெரி­வித்­துள்­ளது.

புதிய அர­சியல் அமைப்பு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும் என்றால் நாட்டில் உள்ள சகல மகா­நா­யக்க தேரர் பீடமும் ஒன்­று­கூடி போரா­ட­வேண்­டிய நிலைமை வரும் எனவும் அஸ்­கி­ரிய மகா­நா­யக்க பீடம் குறிப்­பிட்­டுள்­ளது.

புத்­த­சா­சன அமைச்சின் பிர­தி­நி­திகள் குழு நேற்று முன்­தினம் இரவு அஸ்­கி­ரிய மகா­நா­யக தேரர்­க­ளுடன்
சந்­திப்­பொன்றை மேற்­கொண்டு புதிய அர­சியல் அமைப்பில் பெளத்த மத பாது­காப்பு குறித்து கலந்­து­ரை­யாடல் ஒன்றை மேற்­கொண்­டி­ருந்­தனர். இந்த சந்­திப்­பி­லேயே ஆன­ம­டுவே தம்­ம­தாச அனு­நா­யக தேரர் இதனை
வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கான முன்னுரிமையும் ஒற்றையாட்சித் தன்மையும் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும், ஜனா­தி­பதி முறைமை அவ­சியம். நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை இந்த நாட்டில் இருக்க வேண்டும். மாற்றம் கொண்­டு­வர வேண்டும் என்றால் அது தேர்தல் திருத்­தங்­களில் மாத்­திரம் கொண்­டு­வர வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a comment