நானுஓயா – ஈஸ்டல் தோட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட பெண் ஒருவர், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று (03) மாலை 05.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணை அவரது கணவர் பிரதான வீதியோரத்தில் வைத்து தாக்கியபோது, நுவரெலியா பிரதேசத்தில் இருந்து வந்த லிந்துலை பொலிஸார் கண்டுள்ளனர்.
பொலிஸாரை கண்ட சந்தேகநபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதேவேளை, காயமடைந்த நிலையில் இருந்த பெண்ணை பொலிஸார் தாம் வந்த வாகனத்தில் ஏற்றிச்சென்று நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், நானுஓயா பொலிஸ் அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.