ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைகழகத்தின் இரண்டு பீடங்களின் விரிவுரைகள் தற்காலிகமாக இடை நிறுத்தம்

2096 0

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைகழகத்தின் தடயவியல் மருத்துவ பீட முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் தரங்களுக்கான விரிவுரைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.

அதன் பீடாதிபதி பேராசிரியர் சுதந்த லியனகே இதனை தெரிவித்துள்ளார்.

இரண்டு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மோதலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைகழகத்தின் பீடாதிபதி பேராசிரியர் சுதந்த லியனகே தெரிவித்துள்ளார்.

Leave a comment