குமாரபும் படுகொலை மேன்முறையீடு – தண்டாயுதபாணி

310 0

thandayuthapaaniகுமாரபும் படுகொலை வழக்கில் 6 இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் மேன்முறையீடு செய்யுமாறு, ஜனாதிபதி மீண்டும் கோரப்பட்டுள்ளார்.கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சீ. தண்டாயுதபாணி இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த 6 இராணுவத்தினரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இது தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் சட்ட மா அதிபர் ஊடாக இந்த விடயத்தில் மேன்முறையீடு செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.