தீர்ப்பு வரும்வரை காத்திருக்காது சைட்டம் தொடர்பில் முடிவொன்று எடுக்க வேண்டும் – பாட்டலி

275 0

உயர் நீதிமன்றம் தீர்ப்பொன்றை பெற்றுக்கொடுக்கும் வரை காத்திருக்காது சைட்டம் தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் முடிவொன்று எடுக்கப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கட்சியின் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்தார்.

சைட்டம் தொடர்பான பிரச்சினை மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான பிரச்சினையாகும்.

எனவே, அதற்கு மருத்துவ சபையுடன் இணைந்து அரசாங்கம் நடவடிக்கையொன்றை மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறன்றி வீதிகளில் இறங்கி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதென அமைச்சர்   பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Leave a comment