கையூட்டல் பெற்ற மருத்துவர் கைது

234 0

நோயாளர்களை பரிசோதனை செய்யும் தனியார் ஆய்வகங்களுக்கு நோயாளர்களை அனுப்புவதற்காக பாரிய தொகையினை கையூட்டலாக பெற்றதாக கூறப்படும் மருத்துவரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கையூட்டல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சிலரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு நோயாளர்களை தனியார் ஆய்வகங்களுக்கு அனுப்புவதற்காக குறித்த மருத்துவர் மாதமொன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் தொடக்கம் 30 ஆயிரம் ரூபாய் வரையில் கையூட்டல் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரின் கைப்பேசி உரையாடலை பதிவு செய்ததில் இது தொடர்பில் உறுதியாகியுள்ளதாக கையூட்டல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Leave a comment