சமஷ்டிக்கான கோரிக்கையை திறந்த மனத்துடன் நோக்க வேண்டும் – சம்பந்தன்

311 0

31031சமஷ்டிக்கான கோரிக்கையை திறந்த மனத்துடன் நோக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அவர் இதனைக் கூறியுள்ளார்.

சமஷ்டி பல நாடுகளில அமுலாக்கப்பட்டு வெற்றிகரமாக பின்பற்றப்படுகிறது. இது நாட்டை பிரிக்காமல், மக்களை ஒன்றுபட்டு வாழ வைத்துள்ளது.

இது குறித்து அனைவரும் திறந்த மனத்துடன் நோக்க வேண்டும்பக்கச்சார்புடன் இதனைநோக்கினால் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.