இலங்கை இந்திய பாலம் இல்லை – அமைச்சர்கள் கிரியெல்ல, கபீர் ஹாசிம் தெரிவிப்பு

312 0

adham_bridgeஇலங்கை- இந்திய நாடுகளுக்கு இடையில் பாலம் அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

உயர்கல்வி அமைச்சர் லச்மன் கிரியெல்ல இந்தக்கருத்தை அறிக்கை ஒன்றின்மூலம் தெரிவித்துள்ளார்

கூட்டு எதிர்க்கட்சி, மத்திய வங்கியின் முறிக்கொள்வனவு,  வெட்வரி மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் போன்ற விடயங்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறது.

அவர்கள் தற்போது ஹனுமானின் வாலை பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தநிலையில் இந்திய இலங்கை நாடுகளுக்கு இடையில் பாலம் அமைக்கும் திட்டம் எதுவும் இல்லையென்று கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை இந்தோனேசியாவில் தாம் இந்தப்பாலம் தொடர்பாக வெளியிட்டதாக கூறப்படும் செய்தியை அமைச்சர் கபீர் ஹாசிம் மறுத்துள்ளார்.

இந்த பாலம் தொடர்பில் உயர்மட்ட பேச்சுக்கள் இடம்பெறுவதாக தாம் கூறியதாக தெரிவித்து செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும் அவ்வாறான தகவல் எதனையும் தாம் கூறவில்லை என்று நேற்று  கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அமைச்சர் தெரிவித்தார்.