இலங்கை வர­வுள்ள ஐ.நா.வின் நான்கு விசேட நிபு­ணர்கள்

269 0

இலங்­கையின் தற்­போ­தைய மனித உரிமை நிலை­மைகள், ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை, பொறுப்­புக்­கூறல் செயற்­பா­டுகள் என்­பன  தொடர்பில் மதிப்­பீடு செய்யும் நோக்கில் ஐக்­கிய நாடு­களின் மூன்று  விசேட நிபு­ணர்கள்  இவ்­வ­ருடம் இலங்கை வர­வுள்­ளனர்.  அத்­துடன் ஐக்­கிய நாடு­களின் செயற்­குழு ஒன்றும்   இலங்­கைக்கு வர­வுள்­ளது.

அந்­த­வ­கையில் மனித உரி­மையை பாது­காப்­ப­தற்கும்  ஊக்­கு­விப்­ப­தற்­கு­மான   விசேட நிபுணர்  ஒருவர்    இம்­மாதம்    இலங்கை வர­வி­ருக்­கிறார்.

அத்­துடன் சுதந்­தி­ர­மாக கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்­து­வதை  ஊக்­கு­விப்­ப­தற்கும் பாது­காப்­ப­தற்­கு­மான விசேட  அறிக்­கை­யாளர்  ஒரு­வரும் மற்றும்  உண்மை, நீதி நட்­ட­ஈடு, மீள்­நி­க­ழாமை   தொடர்­பான விசேட நிபுணர் ஒரு­வரும் இவ்­வ­ரு­டத்தில் .இலங்­கைக்கு வர­வுள்­ளனர்.

மேலும் பல­வந்­த­மாக தடுத்­து­வைத்தல் தொடர்­பான ஐக்­கிய நாடு­களின்  செயற்­கு­ழுவும்  இவ்­வ­ருடம்  இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்­ளது.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இவ்­வ­ருடம் மார்ச் மாதம் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை  தொடர்­பான பிரே­ர­ணையின் பிர­கா­ரமே இலங்கை அர­சாங்கம் இவ்­வாறு  ஐக்­கிய நாடு­களின் விசேட நிபு­ணர்­க­ளுக்கும்   செயற்­கு­ழு­வுக்கும் அழைப்பு விடுத்­துள்­ளது.

கடந்த 12 ஆம் திகதி  ஜெனிவா மனித உரிமை பேர­வையில் இடம்­பெற்ற 35 ஆவது கூட்டத்  தொடரின் அமர்வு ஒன்றின் போது  உரை­யாற்­றிய இலங்­கையின்  வதி­விட பிர­தி­நிதி ரவி­நாத ஆரி­ய­சிங்க  இலங்­கையில் அர்த்­த­முள்ள  அதி­கா­ரப்­ப­கிர்வை முன்­னெ­டுக்கும் நோக்கில்  புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்டு வரு­கி­றது.  அந்­த­வ­கையில் புதிய அர­சி­ய­ல­மைப்பின்  நகல்­வ­ரை­பா­னது எதிர்­வரும் மாதங்­களில் நிறை­வ­டையும் என்று  குறிப்­பிட்­டி­ருந்தார்.

மேலும் கடந்த இரண்­டரை வரு­டங்­க­ளாக  ஜனா­தி­பதி சிறி­சேன தலை­மை­யி­லான அர­சாங்கம்  ஐ.நா. முறை­மை­யுடன்  பாரிய  ஈடு­பாட்டை கொண்­டுள்­ளது. சர்­வ­தேச சமூ­கத்­து­டனும்  பய­னுள்ள வகையில் நாம் செயற்­பட்டு வரு­கின்றோம்.  இந்த ஆரோக்­கி­ய­மான ஈடு­பா­டா­னது  மனித உரிமையை பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும், பலப்படுத்தவும்   மற்றும் நல்லாட்சிக்குமான செயற்பாடுகளுக்கும்  சிறந்தவகையில் ஒத்துழைப்பு வழங்கும் என நம்புகிறோம் என்றும்  ரவிநாத ஆரியசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment