உமாஓய திட்ட பிரச்சினை – அராங்கத்திடமிருந்து நேரடி பதில் வேண்டும்

369 0

உமாஓய திட்டத்தினால் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில், அராங்கத்திடமிருந்து நேரடியான பதிலை எதிர்பார்ப்பதாக உமாஓய திட்டத்திற்கு எதிரான மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

அதன் இணைப்பாளரும், ஜேவிபியின் ஊவா மாகாண சபை உறுப்பினருமான சமன்த வித்யாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

உமாஓய திட்டம் தொடர்பில் இன்று பதுளையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த திட்டத்தினால் ஊவா மாகாணத்தில் லட்சக்கணக்கிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊவா மாகாண பாடசாலைகளிலும், இந்த திட்டத்தின் விளைவு தாக்கம் செலுத்தியுள்ளதாக தெரிவித்த அவர், இதனால் அங்கு கற்றல் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

உமாஓய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 28ஆம் திகதி பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment