வவுனியா சுகாதார தொண்டர்கள், வட மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்புக் காரியாலயத்தை இன்று முற்றுகையிட்டனர்(காணொளி)

11767 0

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் நிரந்தர நியமனம் தொடர்பாக, நேற்று மத்திய சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் பிரகாரம், சாதகமான பதில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இன்று வட மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்புக் காரியாலயத்தை முற்றுகையிட்டதாக சுகாதார தொண்டர்கள் தெரிவித்தனர்.

இருந்த போதும் நேற்றையதினம் அவ்வாறானதொரு கலந்துரையாடல் நடைபெறவில்லை என வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தால் சுகாதார தொண்டர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கடந்த மே மாதம் 4 ஆம் திகதி முதல் வவுனியா பிராந்திய வைத்திய அதிகாரி அலுவலகம் முன்பாக கொட்டகை அமைத்து சுகாதார தொண்டர்கள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 58 ஆவது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் என சுகாதார தொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment