வடக்கு மாகாண சபையின் இரண்டு இடைக்கால அமைச்சர்களும் இன்று சத்தியபிரமாணம்

366 0
வடக்கு மாகாண சபையின் இரண்டு இடைக்கால அமைச்சர்களும் இன்று சத்தியபிரமாணம் செய்துக்கொள்ள உள்ளனர்.
வடமாகாண சபைக்கு இடைக்கால அமைச்சர்களாக கந்தையா சர்வேஸ்வரனும், அனந்தி சசிதரனும் நேற்று முதலமைச்சரால் தெரிவு செய்யப்பட்டனர்.
இதற்கமைய கல்வி அமைச்சின் தற்காலிக பொறுப்பு கந்தையா சர்வேஸ்வரனுக்கும், மகளீர் விவகாரம் அனந்தி சசிதரனுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் அவர்கள் இருவரும் இன்று முற்பகல் 10 மணியளவில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துக் கொள்ள உள்ளதாக மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

Leave a comment