வடக்கு மாகாண சபைக்கு இரண்டு தற்காலிக அமைச்சர்கள்

327 0

வடமாகாண சபைக்கு தற்காலிகமாக அமைச்சர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கல்வி அமைச்சின் தற்காலிக பொறுப்பு கந்தையா சர்வேஸ்வரனுக்கும், மகளீர் விவகாரம் அனந்தி சசிதரனுக்கும் வழங்க வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் தீர்மானித்துள்ளார்

இன்று வடமாகாண முதலமைச்சரின் தலைமையில், இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதேவேளை, விவசாய அமைச்சும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பும் தம்மிடமே இருக்கும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

இதனிடையே, நாளைய தினம் காலை 10 மணிக்கு ஆளுநர் முன்னிலையில் புதிய அமைச்சர்கள் இருவரும் சத்திய பிரமாணம் செய்யவுள்ளதாக வடமாகாண உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

 

 

Leave a comment