ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் அடுத்த மாதம் சென்னை வருகிறார்

206 0

காங்கிரஸ் கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் தமிழக எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக அடுத்த மாதம் சென்னை வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் போட்டியிடுகிறார். அவர் நாடு முழுவதும் சென்று காங்கிரஸ் ஆதரவு கட்சிகளின் எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளார்.

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் மீராகுமாரை ஆதரிக்கின்றன. அ.தி.மு.க. பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் அந்த கட்சியின் கூட்டணி கட்சியான மனிதநேய ஜனநாயக கட்சி மீராகுமாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் மற்றும் தி.மு.க. உறுப்பினர்கள் முன் மொழிந்து கடிதம் கொடுத்துள்ளனர்.

தமிழக எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக மீராகுமார் அடுத்த மாதம் (ஜூலை) முதல் வாரத்தில் சென்னை வருகிறார். அப்போது தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவ திரட்டுகிறார்.

Leave a comment