கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தன்னை சந்தேகிக்கின்றனர் – விக்னேஸ்வரன்

218 0
தாம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக, கட்சியின் உறுப்பினர்கள் சிலர் சந்தேகிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றின் செவ்வியில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்புடன் தாம் இணைந்திருப்பதால், இந்த சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டிருப்பட்டிருக்கிறது.
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்து விலகி செயற்படுகிறது.
இதற்கு தாம் எதிர்ப்பை வெளியிட்டு வரும் போதும், தாம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரானவன் இல்லை என்று சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

Leave a comment