அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை மறந்து விட்டது!

231 0

மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி, ஊழலுக்கு எதிராக செயற்பட போவதாக வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை மறந்து விட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேன விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அரசியலமைப்புத் திருத்த்தை கைவிட தயாராகி வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற முதல் முன்னணி அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சர்வஜன வாக்கெடுப்பு நடத்தாமல் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை செய்ய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.

இதனால், நாட்டிற்குள் இந்த அரசாங்கத்தின் ஊடாக தொடர்ந்தும் நல்லாட்சியை எதிர்பார்க்க முடியாது.ஆறு மாதங்களில் நிறைவேற்ற பணிகளை நிறைவேற்ற 100 நாட்கள் போதுமானது என தற்போதைய ஜனாதிபதி கூறியிருந்தார்.

இந்த வாக்குறுதியின் அடிப்படையில், மக்கள் அவரை ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்தனர் எனவும் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment