சுகாதார அமைச்சில் அத்துமீறி நுழைந்த மேலும் இரு மாணவர்கள் கைது

239 0

பல்கலைக்கழக மாணவர்கள் சுகாதார அமைச்சில் அத்துமீறி சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் கலை பீட மாணவ சங்கத்தின் முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சியம்பலாண்டுவ – கொட்டியாகல பிரதேசத்தில் தனது வீட்டில் மறைந்திருந்த போது காவற்துறையால் நேற்று மாலை இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனுடன் இந்த சம்பவம் குறித்து கட்டான பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று மாலிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இந்தம் சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேகர உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு அடுத்த மாதம் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment