இரட்டைக் கொலை செய்த இளைஞருக்கு மரண தண்டனை

216 0

கள்ளக்காதலியை கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தி அவரின் இரு பிள்ளைகளை கொலை செய்த நபரொருவருக்கு எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

23 வயதான இளைஞர் ஒருவருக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு கொடகாவில் பிரதேசத்திலலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெண்ணொருவர் 19 வயது இளைஞருடன் தவறான உறவில் ஈடுபட்ட போது பெண்ணின் இரு பிள்ளைகளும் அதனை பார்த்துள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பிள்ளைகள் தமது அறைக்குச் சென்று முனுமுனுத்து கொண்டிருந்த போது, கோபமடைந்த குறித்த இளைஞன் வீட்டில் இருந்த கத்தியொன்றை எடுத்துச் சென்று அவர்கள் இருவரையும் கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதன்போது தமது இரு பிள்ளைகளையும் காப்பாற்ற முன்வந்த தாயயையும் அந்த இளைஞர் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் இதனை அறிந்த பிரதேசவாசிகள் தப்பிச் சென்ற இளைஞரை பிடித்து காவற்துறையில் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த இளைஞர் வந்த உந்துருளியை காவற்துறை கைப்பற்றி நிலையில்,  ஒரு பிள்ளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

மற்றைய பிள்ளை இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றியனுப்பிய போது உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, கொலை செய்தததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதன்படி தற்போது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a comment