தமிழர்களின் பூர்வீக பிரதேசôங்களான வடக்கு கிழக்கு மாகாணங்களது மருத்துவ மனைகளும் இன்று சிங்கள மயமாவதை அவதானிக்க முடிகிறது.
இந்த வகையில் வடக்கின் 5 மாவட்டங்களது அரச மருத்துவ மனை களும் சிங்கள மருத்துவர்களது பரம்பலுக்குள்ளே அகப்படுகின்றன என்றால் அதற்கு நிச்சயமாக எமது தமிழ் மருத்துவர்கள் எமது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதிலிருந்து விலகி பிறந்த மண்ணை மறந்து தொழில் ரீதியில் வேற்று நாடுகளுக்குச் செல் வதே முக்கிய காரணமாக அமைகிறது.
அந்த வகையில் தற்போதைய சிங்கள மொழி பேசும் மருத்துவர்கள் மற்றும் அத்துறைசார் ஏனைய தர ஊழியர்களது பரம்பலுக்கு இவ்விதம் தமது மண்ணை விட்டு வெளியேறும் தமிழ் மருத்துவத் துறையினரே காரணமாகின்றனர்.
பல்கலைக் கழக மருத்துவ பீட அனுமதியில் இன்று மாவட்ட மக்கள் தொகையே பிரதான பங்கை வகிப்பதனால், ஒரு மருத்துவர் உருவாகுவதில் நிச்சயமாக மக்களுக்கும் பங்கு உண்டு . அதன் பின்னர் பல்கலைக் கழகத்தில் வழங்கப்படும் இலவசக் கல்விக்காக அரசு செலவிடும் நிதியிலும் மக்களின் வரிப்பணப் பங்களிப்பு உண்டு.
இதனைவிட, வன்னியிலே முல்லைத்தீவு , கிளிநொச்சி , மன்னார் மாவட்டங்களில் இருந்து பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகும் மாணவர்களின் நலனுக்்காக மாவட்டத்தின் வருமானத்தின் ஊடாக ஓர் சிறு பகுதிகள் ஒதுக்கப்படுகின்றது.
இவ்வாறாக க.பொ.த உயர்தரத்தின்போது சிறந்த பெறுபேற்றைப் பெற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவாகும் சமயம், ஊடகங்களின் முன்னால் பல கருத்துக்களை கூறிய வர்களில் பலரை இன்று நாட்டிலேயே காண முடியவில்லை. மருத்து வர்களது போக்கில் குறை கண்டுபிடிப்பது இதன் நோக்கமல்ல. மாறாக வடக்கின் இன்றைய தொழில்சார் நிலவரத்தின் பிரதிபலிப்பை வெளிக்கொணரவேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டுள்ளது.
வடமாகாண மருத்துவமனைகளில் சிங்கள மருத்துவர்கள் அதிகரிப்பு
இன்று வடக்கின் 5 மாவட்டங்களிலும் வைத்தியத்துறை ஊழியர்கள் அடிப்படையில் குறிப்பாக வைத்தி யர்கள் தொகையில் குறிப்பிடத்தக்க அளவுக்குச் சிங்கள மருத்துவர்கள் கடமையாற்றி வருகின்றனர். இதனை மாவட்டரீதியில் ஆராய்ந்தால் யாழ்ப்பாண மாவட்டத்திலே போதனா வைத்தியசாலை உள்ளடங்கலாக அனைத்துத் தரப்பிலும் மொத்தமாக 610 மருத்துவர்கள் தேவையாகவுள்ளபோதிலும், 467 மருத்துவர்களே தற்போது பணி புரிகின்றனர்.
இங்கே அதிர்ச்சியான விடயம் என்னவெனில் இவர்களில் 197 பேர் மட்டுமே யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் . இதேபோன்று ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மருத்துவர்கள் 103 பேர் . அதேசமயம் 132 பேர் சிங்கள மருத்துவர்க ளும் 35 முஸ்லீம் மருத்துவர்களும் யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளில் பணிபுரிகின்றனர்.
இதேபோன்றே கிளிநொச்சி மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் அந்த மாவட்டத்துக்கு 94 மருத்துவர்கள் தேவையான நிலையில் 86 மருத்து வர்கள் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். ஆனாலும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர் மட்டுமே அந்த மாவட்ட மருத்துவமனைகளில் பணிபுரியும் அதே நேரம், ஏனைய மாவட்டங களைச் சேர்ந்த 21 தமிழ் மருத்துவர்கள் பணி புரிகின்றனர். அதேசமயம் கிளிநொச்சி மாவட்டத்தில் 50 சிங்கள மருத்து வர்களும் ஒரு முஸ்லிம் வைத்தியரும் பணிபுரியும் நிலமை காணப்படுகின்றது.
இதேபோன்றே வவுனியா மாவட்டத்துக்கு 111 மருத்துவர்கள் தேவையுள்ள நிலையில் 102 மருத்துவர்கள் மட்டுமே அந்த மாவட்டத்தில் பணிபுரிகின்றனர். இந்த நிலையில் வவுனியா மாவட்ட மருத்துவர்கள்24 பேர் மட்டுமே பணிபுரிவதோடு ஏனைய மாவட் டங்களைச் சேர்ந்த தமிழ் மருத்துவர் களாக 21பேரும் பணிபுரிகின்றனர். எஞ்சிய 50 மருத்துவர்கள் சிங்கள மொழி பேசும் மருத்துவர்களும் 7 முஸ்லிம் மருத்துவர்களும் காணப்படு கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளிலும் பாதிக்குப் பாதி சிங்கள மருத்துவர்களே
இவ்வாறே முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 98 மருத்துவர்கள் தேவைப் படும் நிலையில் சகல மருத்துவமனைகளிலும் 60 மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 8 மருத்து வர்களே அந்த மாவட்டத்தைச் சொந்த இடமாக கொண்டவர்கள். அதேபோன்று வடக்கின் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த 12 மருத்துவர்கள் இங்கு பணியாற்றுவதோடு எஞ் சிய30 மருத்துவர்களில் 29 பேர் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள மொழி பேசும் மருத்துவர்களாக வும் ஒருவர் முஸ்லிம் மருத்துவராக வும் காணப்படுகின்றனர்.
இதேநேரம் மன்னார் மாவட்டத்திலே மாவட்ட மருத்துவமனைகளில் மொத்தம் 18 மருத்துவ நிபுணர்களும் 49 மருத்துவர்களுமாக மொத்தம் 67 பேர் பணி புரிகின்றனர்.
இதில் நிபுணர்கள் 18 பேரில் 6பேர் மட்டுமே தமிழர்களாகவும் ஒருவர் முஸ்லீம் இனத்தவராக உள்ளதோடு எஞ்சிய 11பேரும் சிங்கள மொழி பேசும் மருத்துவர்்களாகவே காணப்படுகின்றனர். 49 மருத்துவர்களில் 4பேர் மட்டுமே தமிழ் மருத்துவர்கள். அதேபோன்று 4பேர் மட்டுமே முஸ்லீம் மருத்துவர்களும் காணப்படுவதோடு எஞ்சிய 41மருத்துவர்களும் சிங்கள மருத்துவர்களே காணப்படுகின்றனர்.
இதேபோன்று மன்னார் மாவட்டத்தின் ஏனைய மருத்துவமனைக ளுக்கு 63 மருத்துவர்கள் தேவைப்படும் நிலையில் 32மருத்துவர்கள்மட்டுமே பணிபுரிகின்றனர். இவர்களிலும் 19 மருத்துவர்கள்தமிழ் மருத்துவர்களாகவும் இரு மருத்து வர்கள் முஸ்லிம் மருத்துவர்களாகவும் ஏனைய 11பேரும் சிங்கள இனத்தைச் சேர்ந்த மருத்துவர்களாகவும் உள்ளனர்.
அதாவது மாவட்டத்தின் மொத்த மருத்துவர்கள் தேவையோ 123 ஆக உள்ள நிலையில் தற்போது 99பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்களில் 29பேர் மட்டுமே தமிழ் மருத்துவர்கள் 7 முஸ்லிம் மருத்துவர்களும் சிங்கள இனத்தவர்களான 63 மருத்துவர்கள் பணியாற்றுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இவற்றின் அடிப்படையில் வட மாகாணத்தின் ஒட்டு மொத்த மருத்துவ மனைகளுக்கு மொத்தமாக 1036 மருத்துவர்கள் தேவையானபோதிலும் 814 மருத்துவர்களே கடமையாற்றுகின்றனர். இவ்விதம் பணியிலுள்ள 814 மருத்துவர்களிலும் 443 மருத்துவர்கள் மட்டுமே தமிழ் மருத்து வர்கள் என்பதும் குறிப்பிட வேண்டிதோர் விடயமாகின்றது. 51 முஸ்லிம் மருத்துவர்கள் பணியாற்றுவதோடு 320 சிங்கள மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.