ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் சடலமாக மீட்பு

232 0

வவுனியா – குருமன்காடு பகுதியில் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனது மனைவி உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த வேளையே, அவர் இவ்வாறு மரணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இவ்வாறு மரணித்தவர் 73 வயதான ஒருவராகும்.

மரணத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.

Leave a comment