பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானம்

224 0
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் ஜனாதிபதியின் உத்தியோபூர்வ இல்லத்தில் பேச்சுவார்த்தையொன்று நடத்தப்பட்டது.
இது குறித்து  கருத்து வெளியிட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் சஜித் மல்லவாராச்சி, ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய இணக்கப்பாடுகளுக்கு வரமுடிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவின் அவசர கூட்டமொன்று நடத்தப்பட்டது.
இதன்போது, தற்போது முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment