பிறந்த குழந்தை ஒன்று சடலமாக மீட்பு!

199 0

பிறந்த குழந்தை ஒன்று கழிப்பறை குழியில் இருந்து புத்தல காவற்துறையினால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

இரத்தப்போக்கு காரணமாக பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதனை தொடர்ந்து, அவர் இரகசியமாக குழந்தையை பெற்றெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையிலே புத்தல, பெல்வத்த, பஹலவெல பிரதேசசத்தில் கழிப்பறை குழியில் இருந்து குழந்தை சடலமாக காவற்துறையினால் மீட்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு குழந்தையை பெற்று இவ்வாறான பதறவைக்கும் செயலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பெண்ணின் காணவர் வெளிநாடு சென்றுள்ளதுடன், பெண்ணுக்கு மேலும் 12 வயது மற்றும் 8 வயதுடைய பாடசாலைக்கு செல்லும் 2 பிள்ளைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரான பெண் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மொனராகலை காவற்துறை முன்னெடுத்துள்ளது.

Leave a comment