காணாமல் போனோர் அலுவலகத்தை அமைக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டதை பிரித்தானியா வரவேற்றுள்ளது!

216 0

சிறிலங்காவில் காணாமல் போனோர் அலுவலகத்தை அமைக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டதை பிரித்தானியா வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ், தனது அதிகாரபூர்வ ருவிற்றர் பக்கத்தில்,

சிறிலங்காவில் காணாமல்போனோருக்கான அலுவலக சட்டத்திற்கு அங்கீகாரமளித்துள்ளமை வரவேற்கத்தக்கது.

இதனை உடனடியாக நடைமுறைப்படுத்தி, எல்லாச் சமூகங்களையும் சேர்ந்த மக்கள் தீர்வு ஒன்றைக் கண்டறிவதற்கு உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a comment