யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

269 0

thumb_large_my3யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளில் மாத்திரம் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தினர், சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களின் பெற்றோர்கள் உடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவ குழுக்களுக்கு இடையே கடந்த மாதம் 16ஆம் திகதி மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றமை தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

இதன்போது, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், வன்முறை சம்பவங்கள் மீண்டும் பல்கலைக்கழகத்தில் இடம்பெறாத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதனையடுத்து தமது தீர்மானத்தை அறிவித்த ஜனாதிபதி மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் தமது கவனத்தை செலுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மாணவர்களுக்கான முழுமை பாதுகாப்பையும் அரசாங்கம் உறுதிப்படுத்தும் என்றும் அவர் இதன்போது உறுதியளித்தார்.