இலங்கையின் மூத்த பொருளியலாளர் கலாநிதி சமன் கெலேகம காலமானார். தாய்லாந்து நாட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக பெங்கொக்கில் இருக்கும் இலங்கைத் தூதரகம் கூறியுள்ளது.
இலங்கை கொள்கை மதிப்பீட்டு நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான அவர் கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் புனித தோமஸ் கல்லூரியின் பழைய மாணவராவார்.
சமன் கெலேகம பொருளியல் துறையில் கலாநிதி பட்டத்தை லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார்.