இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை

245 0
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் பாரம்பரிய வைத்திய முறைமைகள் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ளது.
இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவின் சுகாதார அமைச்சிற்கும், இலங்கையின் சுதேச மருத்துவ அமைச்சுக்கும் இடையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்தாகவுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்படுகிறது.

Leave a comment